Paristamil Navigation Paristamil advert login

தொலைபேசிகள், மடிக்கணனிகளை திருத்துவதற்கு அரசு கொடுப்பனவு!

தொலைபேசிகள், மடிக்கணனிகளை திருத்துவதற்கு அரசு கொடுப்பனவு!

23 மார்கழி 2023 சனி 08:35 | பார்வைகள் : 3945


தொலைபேசிகளையும், மடிக்கணனிகளையும் திருத்துவதற்கு அரசு கொடுப்பனவு வழங்க உள்ளது.

€25 யூரோக்களில் இருந்து €50 யூரோக்கள் வரை இந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளன. புதிய தொலைபேசிகள் மற்றும் மடிக்கணனிகள் வாங்குவதை தவிர்ப்பதற்காக, திரை உடைந்த அல்லது மின்கலன் பழுதடைந்த தொலைபேசிகளுக்கு  €25 யூரோக்களும், மடிக்கணனிகளுக்கு €50 யூரோக்களும் கொடுப்பனவாக ஜனவரி 1, 2024 முதல் வழங்கப்பட உள்ளது.

முன்னதாக, வீட்டு உபயோகப்பொருட்களை திருத்துவதற்கு (சலவை இயந்திரம், சமையல் உபகரணங்கள் போன்றவை) அரசு கொடுப்பனவு வழங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்