Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : பாடசாலை உணவில் ஒவ்வாமை - ஆறு மாணவர்கள் மருத்துவமனையில்!!

பரிஸ் : பாடசாலை உணவில் ஒவ்வாமை - ஆறு மாணவர்கள் மருத்துவமனையில்!!

23 மார்கழி 2023 சனி 16:17 | பார்வைகள் : 3593


பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவினால் ஏற்பட்ட ஒவ்வாமையினால் ஆறு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர்.

பரிஸ் 15 ஆம் வட்டாரத்தின் rue de Cherbourg வீதியில் உள்ள பாடசாலை ஒன்றில் டிசம்பர் 21, வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவினாலயே இந்த ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 20 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் நேற்று வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை.

மேலும், ஆறு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களுக்கு வயிற்று வலி, ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு போன்ற அசெளகரியங்கள் ஏற்பட்டன. மேற்படி சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்