Paristamil Navigation Paristamil advert login

காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதி இளைஞன் பலி! - இரவு நேர வன்முறை, 20 மகிழுந்துகள் தீக்கிரை!!

காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதி இளைஞன் பலி! - இரவு நேர வன்முறை, 20 மகிழுந்துகள் தீக்கிரை!!

24 மார்கழி 2023 ஞாயிறு 18:56 | பார்வைகள் : 3509


காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதி பலியான இளைஞன் ஒருவரது சாவுக்கு நீதி கேட்டு இரவுநேர வன்முறைகள் இடம்பெற்று வருகிறது.

Saint-Pierre-des-Corps (Indre-et-Loire) நகரில் இச்சம்பவம் சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இளைஞன் ஒருவர் காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதுண்டு பலியாகியுள்ளார். விசாரணைகளில் தீவிர மன அழுத்தத்தில் இருந்த குறித்த நபர், வேண்டுமென்றே மகிழுந்துக்கு முன்னால் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காவல்துறையினரைக் கண்டித்து அங்கு நேற்று சனிக்கிழமை நள்ளிரவு வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின. மகிழுந்துகள் தீ வைத்து எரிக்கப்படுவதும், சேதமாக்கப்படுவதும் என பல வெறியாட்டங்கள் இடம்பெற்றன. மொத்தமாக 20 மகிழுந்துகள் எரியூட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்