Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மனைவியுடனான சண்டையில் வீட்டைக் கொளுத்திய கணவன்

இலங்கையில் மனைவியுடனான சண்டையில் வீட்டைக் கொளுத்திய கணவன்

25 மார்கழி 2023 திங்கள் 02:30 | பார்வைகள் : 1702


இலங்கையில் கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் கோபமடைந்த கணவர் தமது வீட்டை தீ வைத்து கொழுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் 23 ஆம் திகதி ஆராச்சிக்கட்டுவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, வீடு முழுமையாக தீக்கரையானதுடன் , பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

எனினும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்