Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானில் கோர விபத்து! தாய் உள்பட 8 குழந்தைகள் பரிதாபமாக பலி

பாகிஸ்தானில் கோர விபத்து! தாய் உள்பட 8 குழந்தைகள் பரிதாபமாக பலி

25 மார்கழி 2023 திங்கள் 12:16 | பார்வைகள் : 2591


பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் அபோதாபாத் மாவட்டத்தில் உள்ள தஹாரி கிராமத்தில் தான் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அங்கு, விபரீதமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் மற்றும் அவரது எட்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த குழந்தைகளில் 4 பேர் பெண் குழந்தைகளாகும்.

மீட்பு பணி குழுக்கள், அவசர உதவிக்கான ஆம்புலன்ஸ்கள் ஆகியவை கொண்டுவரப்பட்டும் விபத்தில் எவரையும் காப்பாற்ற முடியவில்லை. 

இந்த சம்பவத்திற்கு, கைபர் பக்துன்க்வாவின் காபந்து முதல்வர் அர்ஷத் ஹுசைன் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜூலை மாதம் லாகூரில் உள்ள ஒரு வீட்டில் குளிர்சாதனப்பெட்டியின் கம்ப்ரசர் வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். 

இதில் குழந்தைகளும் அடங்குவர்.

விபத்தின் போது ஒருவர் மட்டும் எரியும் கட்டடத்தின் மேலிருந்து கீழே குதித்ததில் உயிர் தப்பினார்.

உயிரிழந்தவர்களில், ஒரு ஆண், அவரது மனைவி, இரண்டு பெண்கள், ஐந்து குழந்தைகள் மற்றுமொரு ஏழு மாத குழந்தையும் அடங்கும்.

இதனைத்தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள மக்களுக்கு மின்கசிவு தொடர்பான தீ விபத்து குறித்து விழிப்புணர்வு பரப்பப்பட்டது. 

தற்போது மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்