Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : நிர்வாக தடுப்பு மையத்தில் இருந்து 11 அகதிகள் தப்பி ஓட்டம்!

பரிஸ் : நிர்வாக தடுப்பு மையத்தில் இருந்து 11 அகதிகள் தப்பி ஓட்டம்!

25 மார்கழி 2023 திங்கள் 13:38 | பார்வைகள் : 3499


பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள அகதிகள் தடுப்பு மையத்தில் (Centre de rétention administrative de Vincennes) இருந்து 11 அகதிகள் தப்பி ஓடியுள்ளனர். 

இன்று திங்கட்கிழமை காலை 7 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த தடுப்பு மையத்தில் தங்கியிருந்த அகதிகள்  ஜன்னல் ஒன்றை உடைத்து அதன்வழியாக தப்பிச் சென்றுள்ளனர்.  மொத்தமாக 11 அகதிகள் தப்பிச் சென்றதாக காலை 9 மணிக்கு உறுதிப்படுத்தப்பட்டது.

அவர்களில் S கண்காணிப்பு பட்டியலில் உள்ள ஆபத்தான அகதிகள் எவரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதே தடுப்பு முகாமில் கடந்தவாரம் மோதல் ஒன்று இடம்பெற்றதாகவும், அகதிகள் பலர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்