Paristamil Navigation Paristamil advert login

அவுஸ்திரேலியாவில் கன  மழை - விமானங்கள் ரத்து

அவுஸ்திரேலியாவில் கன  மழை - விமானங்கள் ரத்து

26 மார்கழி 2023 செவ்வாய் 06:45 | பார்வைகள் : 2836


கொட்டித்தீர்த்த மழை காரணமாக சிட்னி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும் வெளி மாகாணங்களுக்கும் புறப்பட தயாராக இருந்த 23 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண தலைநகரான சிட்னியில் கடந்த சில நாட்களாக கன பெய்து வருகிறது.

 இதனால் சிட்னி விமான நிலையத்திற்குள் நீர் வெள்ளக்காடாக காட்சியளித்துள்ளது.

இதனையடுத்து சிட்னி விமான நிலையத்தில் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அந்த நாட்டின் விமான போக்குவரத்து துறை அறிவித்ததுடன் 23 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மேலும் விமானங்கள் ஓடுதளத்தில் தண்ணீரில் மூழ்கியபடி அவை விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டன.

அதேவேளை இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து சிட்னிக்கு வர முயன்ற 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் பிரிஸ்பேன், மெல்போர்ன் நகர் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. 

இதனால் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட சிட்னிக்கு வர இருந்தவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானார்கள்.  


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்