நீதி அமைச்சர் Éric Dupond-Moretti மீதான வழக்கை நிராகரித்தது நீதிமன்றம்!
29 கார்த்திகை 2023 புதன் 15:26 | பார்வைகள் : 10122
பிரான்சின் நீதி அமைச்சர் (ministre de la Justice) Éric Dupond-Moretti மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு வழக்கை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அமைச்சர் Éric Dupond-Moretti மீது ‘பதவியை பயன்படுத்தி சட்டவிரோத நலன்களை பெற்றுக்கொண்டார்’ என குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டது. அதையடுத்து இன்று குடியரசின் நீதிமன்றம் (Cour de justice de la République (CJR)) இந்த வழக்கை நிராகரித்து நீதி அமைச்சர் Éric Dupond-Moretti குற்றமற்றவர் என அறிவித்துள்ளது.
கடந்த 10 நாட்களாக அவர் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர், இன்று புதன்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் இதனை நீதிமன்றம் அறிவித்தது.
”இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். சட்டம் கட்டளையிட்டது இதைத்தான். நீதி அமைச்சரை குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!” என நீதி அமைச்சரின் வழக்கறிஞர் Jacqueline Laffont தெரிவித்தார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan