Paristamil Navigation Paristamil advert login

நேபாளத்தில் கோர விபத்து - 2 பேர் பலி

நேபாளத்தில் கோர விபத்து - 2 பேர் பலி

30 கார்த்திகை 2023 வியாழன் 05:30 | பார்வைகள் : 2681


நேபாளத்தின் மேற்கு பகுதியில் தனாஹு மாவட்டத்தின் கன்சிகுவாவில் அதிகாலை 5.30 மணியளவில் பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்த போது திடீரென சாலையை விட்டு விலகி சென்று கவிழ்ந்தது.

இந்த பேருந்து விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர்.

32 பேர் வரை காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரனில் இருந்து பொக்காரா நோக்கி சென்ற பேருந்து திடீரென சாலையை விட்டு விலகி சென்று 10 மீட்டர் கீழே சென்று விழுந்துள்ளது.

பேருந்து ஓட்டுநர் உட்பட 32 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 9 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மேல் சிகிச்சைக்காக பொக்ராவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் பேருந்து விபத்து குறித்து நேபாள பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்