Paristamil Navigation Paristamil advert login

அதிரடி முடிவு எடுத்த விஜய்சேதுபதி?

அதிரடி முடிவு எடுத்த விஜய்சேதுபதி?

30 கார்த்திகை 2023 வியாழன் 09:49 | பார்வைகள் : 1825


இனிமேல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதில்லை. நடித்தால் இனி ஹீரோதான் என முடிவெடுத்துள்ளார் விஜய்சேதுபதி. இந்த முடிவுக்குப் பின்னால் ஷாருக்கான் உள்ளாரா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் கிளப்பி வருகின்றனர்.

நடிகர் விஜய்சேதுபதி இனிமேல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது இல்லை என முடிவெடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். சர்வதேச கோவா திரைப்பட விழாவில் பேசிய விஜய்சேதுபதி, “ஹீரோக்கள் என்னிடம் கேட்டுக்கொண்டதால் தான் நான் பல படங்களில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டேன். நிறைய அழுத்தம் இருப்பதால் இனி வில்லனாக நடிக்க வேண்டாம் என முடிவு செய்திருக்கிறேன்.

வில்லனாக நடிக்கும்போது சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. ஹீரோவை விட வில்லன் பவர்புல்லாக தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே பார்த்து பார்த்து நடிக்க வைக்கிறார்கள். இதனால், நான் நன்றாக நடித்த நிறைய காட்சிகள் எடிட்டிங்கில் போய்விட்டது. அதனால் சில வருடங்கள் வில்லனாக நடிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

அண்மையில், விஜய்சேதுபதி ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்தார். படம் வெளியாவதற்கு முன்பு அவர் கதாபாத்திரம் மீது எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் வெளியான பின்பு அவர் கதாபாத்திரம் மீது பெரிய ஈர்ப்பில்லை என்ற விமர்சனமே அதிகம் பார்க்க முடிந்தது.

இதனால்தான் விஜய்சேதுபதி இந்த முடிவு எடுத்தாரோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் கிளப்பி வருகின்றனர். ‘விக்ரம் வேதா’ படத்தில்தான் நெகட்டிவ் ரோலில் நடிக்க ஆரம்பித்தார் விஜய்சேதுபதி. அதன்பிறகு, ’பேட்ட’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ எனத் தொடர்ச்சியாக முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனானவர். தற்போது இந்த முடிவு எடுத்துள்ளது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்