Paristamil Navigation Paristamil advert login

மழை வெள்ள அபாயம்! - நான்கு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

மழை வெள்ள அபாயம்! - நான்கு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

30 கார்த்திகை 2023 வியாழன் 11:09 | பார்வைகள் : 2388


மழை வெள்ளம் காரணமாக பிரான்சின் நான்கு மாவட்டங்களுக்கு வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.

Isère, Savoie, Haute-Savoie, Hautes-Alpes ஆகிய நான்கு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் எனவும், வெள்ள அனர்த்தம் ஏற்படும் தெரிவிக்கப்பட்டு, அங்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை மாலை 4 மணி முதல், நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ள அனர்த்தம் காரணமாக வீதி போக்குவரத்துக்கள் தடைப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்