Paristamil Navigation Paristamil advert login

தொடருந்து நிலையங்களில் வாடகைக்கு விடப்படும் குடைகள்!!

தொடருந்து நிலையங்களில் வாடகைக்கு விடப்படும் குடைகள்!!

30 கார்த்திகை 2023 வியாழன் 11:41 | பார்வைகள் : 3592


தொடருந்து நிலையங்களில் குடைகளை வாடகைக்கு பெற்றுக்கொள்ள முடியும் என RATP அறிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி தற்போது மூன்றாவது ஆண்டாக தொடர்கிறது.

7 யூரோக்கள் இருப்பு பணமாக செலுத்தி குடையினை பெற்றுக்கொள்ள முடியும். அதனை திருப்பி வழங்குவதற்கு கால அவகாசம் எதுவும் இல்லை. நீங்களே வைத்துக்கொள்ள முடியும். குடை உங்களுக்கு தேவைப்படவில்லை என்றால் அதனை மீள கையளித்து உங்களது பணத்தினை பெற்றுக்கொள்ள முடியும். குடை சேதமடைந்திருக்கக்கூடாது என்பது அவசியம்.

இந்த வசதி கடந்த 2021 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது 13 நிலையங்களில் மட்டுமே கொண்டுவரப்பட்ட இந்த வசதி, இவ்வருடம் 340 மெற்றோ நிலையங்களில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவர்ரை 2,300 குடைகள் அதுபோல் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்