Paristamil Navigation Paristamil advert login

விசேட செய்தி : parc de Passy அருகேபயங்கரவாத தாக்குதல்! - ‘அல்லா அக்பர்’ என கோஷம்! - ஒருவர் பலி!!

விசேட செய்தி : parc de Passy அருகேபயங்கரவாத தாக்குதல்! - ‘அல்லா அக்பர்’ என கோஷம்! - ஒருவர் பலி!!

3 மார்கழி 2023 ஞாயிறு 03:00 | பார்வைகள் : 4280


”அல்லா அக்பர்” (இறைவனே பெரியவன்) என கோஷமிட்டுக்கொண்டு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் ஒன்றில் சுற்றுலாப்பயணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். 

நேற்று சனிக்கிழமை இரவு பரிசில் உள்ள parc de Passy பூங்கா அருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆயுததாரி ஒருவன் வீதியில் சென்ற நபர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளான். *கத்தி ஒன்றில் அங்கிருந்த ஒருவரை குத்தியுள்ளான். இத்தாக்குதலில் *ஜேர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பின்னர் மேலும் இரு சுற்றுலாப்பயணிகளை சுத்தியல் ஒன்றின் மூலம் தாக்கியுள்ளான். 

காவல்துறையினர் அழைக்கப்பட்டு தாக்குதலாளி துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார். 

காயமடைந்தவர்களில் ஒருவர் 1957 ஆம் ஆண்டு பிறந்த இங்கிலாந்து பிரஜை என அறிய முடிகிறது. கொல்லப்பட்டவரும், காயமடைந்த இரண்டாவது நபரும் ஜெர்மனி நாட்டவர் எனவும் அறிய முடிகிறது. 
****

பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள parc de Passy பூங்காவின் அருகே உள்ள Bir-Hakeim மேம்பாலத்துக்கு அருகே இந்த தாக்குதல் இரவு 10 மணிக்கு சற்று முன்பாக இடம்பெற்றுள்ளது. தாக்குதலாளி அல்லா அக்பர் என கோஷம் எழுப்பியதாகவும், அவர் காவல்துறையினரால் நன்கு அறியப்பட்டவன் எனவும் அறிய முடிகிறது.

சம்பவ இடத்துக்கு உள்துறை அமைச்சர் Gérald Darmanin நேரில் சென்று நிலமைகளை ஆராய்ந்தார். தாக்குதலாளி S கண்காணிப்பு பிரிவில் உள்ள கண்காணிக்கப்பட்டு வந்த நபர் என அறிய முடிகிறது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்