Paristamil Navigation Paristamil advert login

Brussels தாக்குதலில் தொடர்புடைய - பரிசில் ஒருவர் கைது!

Brussels தாக்குதலில் தொடர்புடைய - பரிசில் ஒருவர் கைது!

3 மார்கழி 2023 ஞாயிறு 09:23 | பார்வைகள் : 3773


பெல்ஜியத்தின் தலைநகர் Brussels இல் கடந்த ஒக்டோபர் 16 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த தாக்குதலில் தொடர்புடைய ஒருவரை பரிஸ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இத்தாக்குதல் தொடர்பில் பிரான்சில் கைதுசெய்யப்படும் நான்காவது நபர் இவராவர்.

சர்வதேச பயங்கரவாத தடுப்பு பிரிவினர் (Pnat) மேற்கொண்டுவந்த விசாரணைகளை அடுத்து, நேற்று சனிக்கிழமை பரிசில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலாளிக்கு உதவியவர்களில் முக்கியமான குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் தெரிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 16 ஆம் திகதி Brussels நகரில் இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டி ஒன்றின் போது, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இருவர் தங்களது அணிக்கு ஆதரவளிக்க அங்கு சென்றிருந்தனர். அதையடுத்து 45 வயதுடைய Abdesalem Lassoued எனும் பயங்கரவாதி அவர்கள் இருவரையும் கத்தியால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் இருவரும் கொல்லப்பட்டிருந்தனர்.

துனுசிய நாட்டைச் சேர்ந்த தாக்குதலாளி Abdesalem Lassoued மறுநாள் பெல்ஜிய காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இந்த தாக்குதலாளிக்கு உதவியதாக தெரிவிக்கப்பட்டு இல் து பிரான்சுக்குள் இருவர் கடந்த ஒக்டோபர் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர். இருவரும் துனிசியாவைச் சேர்ந்தவர்கள் என அறிய முடிகிறது. பின்னர் பிரான்ஸ்-பெல்ஜிய எல்லையில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று நான்காவது நபராக பரிசில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்