Paristamil Navigation Paristamil advert login

Val-d'Oise : கத்திக்குத்து தாக்குதலில் சிறுவன் பலி!

Val-d'Oise : கத்திக்குத்து தாக்குதலில் சிறுவன் பலி!

3 மார்கழி 2023 ஞாயிறு 18:00 | பார்வைகள் : 2712


நேற்று சனிக்கிழமை இரவு பரிசில் பயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த தாக்குதல் இடம்பெறுவதற்கு சற்று முன்னர், Val-d'Oise மாவட்டத்தின் Montmagny நகரில் ஒரு கத்திக்குத்து தாக்குதல் ஒன்று இடம்பெற்றது.

16 வயதுடைய சிறுவன் ஒருவன் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்டுள்ளான். தாக்குதலாளிகள் அவனிடம் இருந்து சில பொருட்களை திருடிக்கொண்டு சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ‘Tinder எனும் சமூகவலைத்தளமூடாக பழகிய நபர் ஒருவரை நேரில் சந்திக்க குறித்த சிறுவன் முயன்றதாகவும், அதன் முடிவில் நேற்று சனிக்கிழமை இரவு இந்த சந்திப்பு Montmagny நகரில் இடம்பெற்றதாகவும், ஆனால் சிறுவன் கொள்ளையர்களின் சூழ்ச்சி வலையில் சிக்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவனுக்காக காத்திருந்த இருவர், சிறுவனை தாக்கி, அவனிடம் இருந்த தொலைபேசி பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டுள்ளனர். சிறுவனை கத்தியால் தாக்கியதில் அவன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளான்.

தாக்குதலை மேற்கொண்ட இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. Val-d'Oise மாவட்ட காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்