Paristamil Navigation Paristamil advert login

ஜேர்மனியில் விடுக்கப்பட்டுள்ள நிலச்சரிவு அபாய எச்சரிக்கை

ஜேர்மனியில் விடுக்கப்பட்டுள்ள நிலச்சரிவு அபாய எச்சரிக்கை

4 மார்கழி 2023 திங்கள் 07:32 | பார்வைகள் : 2527


ஜேர்மனியின் தெற்குப் பகுதியில் உள்ள பவேரியா மாநிலத்தில்  கடும் பனிப்பொழிவு பெய்து வருகின்றது.

இதன் காரணமாக போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டு ஒட்டு மொத்த நகரமே முடங்கியுள்ளது.   

விமானங்கள், பேருந்து சேவைகள் மற்றும் ரயில் தண்டவாளத்தில் பனிகள் மூடப்பட்டுள்ளதால் அனைத்து சேவைகளும் முடங்கியுள்ளன. 

பல பகுதிகளில் விமானங்களின் புறப்பாடு மற்றும் தரையிறங்குதல் போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

முனிச் மற்றும் உல்மில் சில ரயில்களில் உள்ள பயணிகள் தங்கள் இரவை ரயிலிலேயே கழிக்க வேண்டியதாக இருந்துள்ளது.

போக்குவரத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதால் பல சாலை விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. 

இது தொடர்பில் அந்நாட்டு மீட்டு படையினர் தெரிவித்த அறிக்கையின் படி

இதுவரையில் சுமார் 350 விபத்துகள் ஏற்பட்டுள்ள நிலையில் பலருக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு, தென்கிழக்கு மற்றும் மாநிலத்தின் வடக்குப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு தொடரும் என்று ஜேர்மன் வானிலை சேவை தெரிவித்துள்ளது.

இதையடுத்து ஜேர்மனியில் மாத்திரமின்றி அதை சுற்றியுள்ள ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்திலும் பனிப்புயல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த இயற்கை அனர்த்தம் காரணமாக சாலையில் மரம் முறிந்து விழுந்து பலர் மின்சார தடையினால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

மேலும் பனிபுயல் காரணமாக ஏற்பட்ட பனிமண்டலங்கள் பின் நிலச்சரிவாக மாறும் அபாயம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்