Paristamil Navigation Paristamil advert login

தாய்லாந்தில் கோர விபத்து!   14 பேர் பலி

தாய்லாந்தில் கோர விபத்து!   14 பேர் பலி

5 மார்கழி 2123 ஞாயிறு 07:34 | பார்வைகள் : 2802


தாய்லாந்தின் பிரச்சுவாப் கிரி கான் மாகாணத்தில் பேருந்து  கட்டுப்பாட்டை இழந்து, மரத்தில் மோதி, பாதியாகப் பிழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாய்லாந்தில் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் 14 பேர் பலியாகியதுடன், 20 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். 

தாய்லாந்தின் மேற்கு மாகாணமான பிரசுவாப் கிரி கான் பகுதியில் நள்ளிரவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்திற்குப் பிறகு பேருந்தின் முன்பகுதி பாதியாகப் பிளவுபட்டுள்ளது. 

ஓட்டுநருக்கு போதுமான தூக்கம் இல்லாத காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அந்நாட்டு பொலிஸார்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.     

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்