Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சாதாரண தர, புலமைப் பரிசில் பரீட்சைகளில் மாற்றம்

இலங்கையில் சாதாரண தர, புலமைப் பரிசில் பரீட்சைகளில் மாற்றம்

5 மார்கழி 2023 செவ்வாய் 09:42 | பார்வைகள் : 1720


க.பொ.த. சாதார தரணப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளில் மாற்றங்கள் மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசுல் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று கல்வி அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறினார்.

உத்தேச கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், இந் நாட்டுப் பிள்ளைகள் 18 வயதை அடையும் போது பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை பெறுவார்கள்.

அத்துடன், உத்தேச கல்வி சீர்திருத்தங்களின் மூலம் இந்நாட்டு மாணவர்கள் 21 வயதிற்குள் பல்கலைக்கழக பட்டம் பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்