Paristamil Navigation Paristamil advert login

`கே.ஜி.எஃப்3’ படத்தில் இருந்து விலகும் இயக்குநர் நீல்?

`கே.ஜி.எஃப்3’ படத்தில் இருந்து விலகும் இயக்குநர் நீல்?

7 மார்கழி 2023 வியாழன் 09:06 | பார்வைகள் : 1236


'கே.ஜி.எஃப்3’ படம் உருவாவது உறுதி. ஆனால், நான் இயக்குவேனா என்பது சந்தேகம் என அதன் இயக்குநர் பிரஷாந்த் நீல் கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான ‘கே.ஜி.எஃப்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. கன்னட சினிமாவுக்கு உலக அரங்குகளில் இந்தப் படம் புது வெளிச்சத்தைப் பாய்ச்சியது. இதன் இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. இரண்டாம் பாகத்தின் முடிவிலேயே கதாநாயகன் இறந்துவிடுவது போல காட்டியிருந்தாலும் மூன்றாம் பாகத்திற்கான லீடும் கதையில் வைக்கப்பட்டு இருந்தது. இதனால், ‘கே.ஜி.எஃப்3’ படத்தினை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தனர். இதுகுறித்து சமீபத்தில் பிரஷாந்த் நீல் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அவர் பேசியிருப்பதாவது, “கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாம் பாகம் உருவாவது உறுதி. அதற்கான கதையும் ஏற்கெனவே தயாராக உள்ளது. யாஷ் மிகவும் பொறுப்பான நபர், வெறும் வியாபார நோக்கத்துடன் மட்டுமே எதையும் செய்யமாட்டார். ‘கே.ஜி.எஃப்’ மூன்றாம் பாகத்தை நான் இயக்குவேனா இல்லையா என்று தெரியாது. ஆனால், அதில் கண்டிப்பாக யாஷ் இருப்பார். வாய்ப்பு இருந்தால் யாஷ் இந்தப் படத்தினை இயக்கவும் செய்வார்” எனவும் கூறியுள்ளார் நீல்.

நீல் தற்போது பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தில் பிஸியாக உள்ளார். இதை ஒட்டியே அவர் ‘கே.ஜி.எஃப்3’ படத்தை இயக்குவது குறித்தானத் தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்