Paristamil Navigation Paristamil advert login

சுவிட்சர்லாந்தில் கொலைசெய்துவிட்டு பரிசில் ஒளிந்துகொண்ட நபர்! - கைது!!

சுவிட்சர்லாந்தில் கொலைசெய்துவிட்டு பரிசில் ஒளிந்துகொண்ட நபர்! - கைது!!

8 மார்கழி 2023 வெள்ளி 09:49 | பார்வைகள் : 4508


சுவிட்சர்லாந்து காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ஒருவர் பரிசில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த நவம்பர் 29 ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் ஒருவரை கொல்லப்பட்ட சம்பவத்தில் நேரடி தொடர்பில் இருந்த ஒருவரே பரிசில் நேற்று முன் தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். 66 வயதுடைய ஒருரை குறித்த நபர் 19 தடவைகள் கத்தியால் குத்தி கொன்றுள்ளார்.

பின்னர் அந்நாட்டு காவல்துறையினர் மேற்கொண்டு வந்த விசாரணைகளில் 27 வயதுடைய அவரது மருமகனே கொலையாளி என தெரிவிக்கப்பட்டதுடன், அவர் பரிசுக்கு தப்பி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர், பரிஸ் காவல்துறையினரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்