Paristamil Navigation Paristamil advert login

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கிய 'அன்னபூரணி' !

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கிய 'அன்னபூரணி' !

8 மார்கழி 2023 வெள்ளி 13:13 | பார்வைகள் : 1788


சென்னையில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும்,அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

நடிகர்கள்,தன்னார்வலர்கள் என பலர் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.இந்நிலையில், அன்னபூரணி படக்குழு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கியுள்ளனர்.இது தொடர்பான புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.

இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'அன்னபூரணி' என்பது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்