Paristamil Navigation Paristamil advert login

கவுதம் கம்பீர் மீது குற்றச்சாட்டும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்த 

கவுதம் கம்பீர் மீது குற்றச்சாட்டும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்த 

9 மார்கழி 2023 சனி 06:50 | பார்வைகள் : 1458


முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தன்னை அநாகரிகமான முறையில் திட்டியதாக ஶ்ரீசாந்த் வருத்துடன் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கான லெஜண்ட் கிரிக்கெட் லீக் தொடர் கடந்த நவம்பர் 18 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் கவுதம் கம்பீர் தலைமையிலான இந்தியா கேப்பிடல் அணிக்கும் பார்த்தீவ் படேல் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கும் இடையே சமீபத்தில் எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது.

இதில் இந்தியா கேப்பிடல் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆனால் போட்டியின் நடுவே கவுதம் கம்பீருக்கும், குஜராத் ஜெயன்ட்ஸ் அணியில் விளையாடிய ஶ்ரீசாந்த்-க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் ஶ்ரீசாந்த் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், கவுதம் கம்பீர் தன்னை மைதானத்தில் வைத்து  தன்னை திட்டியதாகவும், FIXER(சூதாட்டக்காரர்) என  கூறி 3 முறை திட்டியதாக ஶ்ரீசாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரிடம் மோசமாக நான் நடந்து கொள்ளாத நிலையிலும், கவுதம் கம்பீர் என்னை மிகவும் மோசமாக திட்டியதாகவும் இதனால் நானும் எனது குடும்பத்தினரும் மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கவுதம் கம்பீர் அவரது எக்ஸ் தளத்தில், கவன ஈர்ப்பு நிறைந்த இந்த உலகில், புன்னகை செய்வோம் என பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து மீண்டும் இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோ வெளியிட்ட ஶ்ரீசாந்த், கவுதம் கம்பீரை சண்டைக்காரர் என விமர்சித்தார்.


அத்துடன் மைதானத்தில் அவர் சேவாக் போன்ற மூத்த வீரர்களை கூட அவமதித்ததாக தெரிவித்துள்ளார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்