இலங்கையில் TIN இலக்கம் தொடர்பான செயற்பாடுகளை இலகுபடுத்துமாறு பணிப்பு
9 தை 2024 செவ்வாய் 11:45 | பார்வைகள் : 5883
பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் TIN இலக்கம் வழங்குவது தொடர்பான செயற்பாடுகளை உடனடியாக இலகுபடுத்தவும் மற்றும் விரிவுபடுத்தவும் துரித நடவடிக்கை எடுக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி அனைத்து பிரதேச செயலகங்களும் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதற்கென தனி பிரிவு ஒன்றை திறப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை தயார் செய்யுமாறு பொது நிர்வாக அமைச்சகத்திற்கு பணிப்புரை விடுத்த அமைச்சர், இது தவிர அரசு வங்கிகள், ஆட்கள் பதிவு திணைக்களம், மோட்டார் போக்குவரத்து போன்ற இடங்களில் கவுன்டர்களை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
TIN வழங்குவதை வினைத்திறனாக்குவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களம், அரச நிர்வாகம் மற்றும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் (ICTA) அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
எரிபொருளைப் பெறுவது தொடர்பான QR குறியீடுகளை வழங்குவதில் முன்னர் மேற்கொள்ளப்பட்டதைப் போன்று இங்கும் திறமையான செயல்முறை எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, தற்போதைய ஆன்லைன் பதிவு விண்ணப்பப் படிவத்தை சுருக்கி, TIN இலக்கத்தைப் பெற எடுக்கும் நேரத்தை சுமார் ஐந்து நாட்கள் குறைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அதன்படி, இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை அரசு நிர்வாகம் மற்றும் உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan