Paristamil Navigation Paristamil advert login

நாய் இறைச்சியை சாப்பிடும்  தென் கொரியா மக்கள்- அரசின்   அதிரடி..!

நாய் இறைச்சியை சாப்பிடும்  தென் கொரியா மக்கள்- அரசின்   அதிரடி..!

9 தை 2024 செவ்வாய் 14:37 | பார்வைகள் : 2300


தென் கொரியாவில் நாய் இறைச்சியை சாப்பிடும் பழக்கம் மக்களிடையே  பழங்காலத்தில் இருந்து நிலவி வருகிறது.

அதனை தடை செய்வதற்கு அரசாங்கம் நீண்ட காலமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

இதேபோல், நாய் இறைச்சி உண்பதை தடை செய்ய வேண்டும் என தென் கொரியாவில் பிராணி நல ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.


நாய் இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததையடுத்து, சட்டம் கொண்டு வர தென் கொரிய அரசாங்கம் முடிவு செய்தது.

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மசோதா அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. ஒரு ஓட்டு கூட எதிர்ப்பாக விழவில்லை.

இவ்வாறான நிலையில் அதிபர் யூன் சுக் யியோல் ஒப்புதல் அளித்ததும் தென்கொரியாவில் நாய்கறி சாப்பிடுவதற்கு அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்