Paristamil Navigation Paristamil advert login

ராகுல் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கார்த்தி: காங்கிரஸ் நோட்டீஸ்

ராகுல் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கார்த்தி: காங்கிரஸ் நோட்டீஸ்

9 தை 2024 செவ்வாய் 17:04 | பார்வைகள் : 2154


பிரதமர் மோடியுடன் ராகுலை ஒப்பிட்டு பேசியதற்காக, சிவகங்கை எம்.பி., கார்த்திக்கிற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை எனக்குக் கொடுத்தால் கட்சியை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வேன்” என்று கருத்துச் சொல்லி வரும் கார்த்தி , அவ்வப்போது காங்கிரஸ் தலைமையின் கருத்துக்கு எதிர் கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்.

சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த கார்த்தி ,  பிரதமர் மோடிக்கு நிகரான தலைவர் யாரும் நாட்டில் இல்லை என வெளிப்படையாகச் சொல்லி இருந்தார். இது காங்கிரஸ் வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

பிரதமர் மோடியுடன் ராகுலை ஒப்பிட்டு பேசியதற்காக, சிவகங்கை எம்.பி., கார்த்திக்கிற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்