Paristamil Navigation Paristamil advert login

பிக் பாஸ் போட்டியாளர்களை தனி அறையில் வைத்து பூட்டிய பிக்பாஸ்.

பிக் பாஸ்  போட்டியாளர்களை தனி அறையில் வைத்து பூட்டிய பிக்பாஸ்.

10 தை 2024 புதன் 15:18 | பார்வைகள் : 1481


பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி விட்ட நிலையில் திடீரென பிக் பாஸ் 6 போட்டியாளர்களையும் தனித்தனி அறைக்கு செல்லுமாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் ஞாயிறு உடன் முடிவடையும் நிலையில் இவர்களில் யார் வெளியேறுவார்கள்? யார் டைட்டில் பட்டம் பெறுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு ஏற்கனவே எலிமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்களும் விருந்தினராக வந்திருக்கும் நிலையில் பிக் பாஸ் இடம் இருந்து திடீரென ஒரு அறிவிப்பு வருகிறது. அந்த அறிவிப்பில் பிக் பாஸ் வீட்டில் உள்ள 6 போட்டியாளர்களும் தனி தனி அறைக்கு செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது.

இதனை அடுத்து விஷ்ணு, மணி, மாயா, அர்ச்சனா, தினேஷ், மற்றும் விஜய் வர்மா ஆகிய 6 பேரும் தனித்தனி அறைக்கு செல்கின்றனர். இப்போது 6 பேரும் கதவை திறக்க வேண்டும் என்றும் கதவு திறந்தால் அவர்கள் போட்டியில் தொடரலாம் என்றும் கதவு திறக்காதவர் மட்டும் மிட் வீக் எவிக்சன் செய்யப்பட்டவராக கருதப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கதவை திறக்கலாம் என பிக் பாஸ் கூறிய போது வீட்டுக்குள் வந்த விருந்தினர்கள் மிகவும் ஆர்வத்துடன் யார் யார் வருகிறார்கள் என்பதை பார்ப்பதுடன் இன்றைய அடுத்த புரமோ முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே மிட்விக் அட்மிஷன் ஆக விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார் என்ற செய்தியை பார்த்தோம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்