Paristamil Navigation Paristamil advert login

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ஜெயம் ரவியின் புதுபடம்?

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ஜெயம் ரவியின் புதுபடம்?

10 தை 2024 புதன் 15:24 | பார்வைகள் : 1505


'அகிலன்’, ‘இறைவன்’ என அடுத்தடுத்தப் படங்கள் தோல்வி அடைந்ததால் அடுத்து நடிகர் ஜெயம் ரவியின் புது படம் ஓடிடியில் வெளியாகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நடிகர் ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. அந்தப் படம் கொடுத்த வெற்றி உற்சாகத்திலேயே ‘அகிலன்’, ‘இறைவன்’ ஆகிய இரண்டு படங்களை வெளியிட்டார். ஆனால், அவை இரண்டுமே தோல்விப் படங்களாக அமைந்தது. ஆனாலும், அடுத்து கீர்த்தி சுரேஷூடன் ‘சைரன்’, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ‘காதலிக்க நேரமில்லை’, கமலுடன் ‘தக் லைஃப்’, ராஜேஷ் இயக்கத்தில் ’பிரத’ர், வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ’ஜீனி’, மோகன் ராஜா இயக்கத்தில் ’தனி ஒருவன் 2’ என கைவசம் அரை டஜன் படங்கள் வைத்துள்ளார் ஜெயம் ரவி.

இந்த நிலையில், கீர்த்தி சுரேஷூடன் அவர் நடித்திருக்கும் ‘சைரன்’ திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ‘சலார்’ உள்ளிட்டப் பான் இந்திய படங்கள் வெளியீட்டால் இந்தப் படம் டிசம்பர் வெளியீட்டில் இருந்து பின் வாங்கியது. இந்த நிலையிதான் இந்தப் படம், குடியரசு தினமான ஜனவரி 26 அன்று நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. ‘இறைவன்’, ‘அகிலன்’ ஆகிய படங்களின் தோல்வியால் ஜெயம் ரவியின் மார்கெட் சரிந்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்