நேபாளத்தில் கோர விபத்து... 12 பலி..

13 தை 2024 சனி 09:46 | பார்வைகள் : 12548
நேபாள நாட்டின் டாங் மாவட்டம் நேபால் கஞ்சில் இருந்து காத்மாண்டுக்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் பாலத்தில் இருந்து அருகிலுள்ள ஆற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 2 இந்தியர்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக இறந்தனர்.
22 பேர் படுகாயம் அடைந்தனர்.
பலியானவர்களில் 8 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதில் இந்தியர்களான பீகாரை சேர்ந்த யோகேந்திரராம் (67), உத்தர பிரதேசத்தை சேர்ந்த முனே ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.
பஸ் ஆற்றில் விழுந்த விபத்தில் 12 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025