Paristamil Navigation Paristamil advert login

வறுமையிலிருந்து மீண்டவர்கள் 24 கோடி பேர் : நிடி ஆயோக்

வறுமையிலிருந்து மீண்டவர்கள் 24 கோடி பேர் : நிடி ஆயோக்

16 தை 2024 செவ்வாய் 03:18 | பார்வைகள் : 1236


கடந்த 9 ஆண்டுகளில் 24 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக நிடி ஆயோக் வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனமான ‛நிடிஆயோக்' நிறுவனம் , நாட்டில் வறுமையிலிருந்து மீண்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில்,  கடந்த 9 ஆண்டுகளில் 24.08 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். 

இதில் கல்வி, சுகாதாரம், வாழ்க்கை தரம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள நிலையான வளர்ச்சியால் கடந்த 2013-14-ம் ஆண்டில்  வறுமையிலிருந்து மீண்டவர்கள் 29.17 சதவீதம் இருந்தது,  கடந்த 2022-23-ம் ஆண்டில் 11.28 சதவீதமாக குறைந்துள்ளது.  உத்திரபிரதேசம், பீஹார், மத்திய பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்கள் அடங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்