Seine-Maritime மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு €20 மில்லியன் யூரோக்கள் அதிஷ்ட்டம்!!

16 தை 2024 செவ்வாய் 10:11 | பார்வைகள் : 14460
€20 மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு €20 மில்லியன் யூரோக்கள் அதிஷ்ட்டத்தில் கிடைத்துள்ளது.
Lotto அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பிலேயே இந்த பெரும் தொகை பணம் அவருக்கு கிடைத்துள்ளது. நேற்று ஜனவரி 15 ஆம் திகதி, திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட சீட்டிழுப்பில், Seine-Maritime மாவட்டத்தில் விற்பனையான ஒருவரே வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது. 7, 11, 15, 19, 23 ஆகிய வெற்றி இலக்கங்களையும், அதிஷ்ட்ட இலக்காமாக ‘4’ ஆம் இலக்கமும் கொண்ட சீட்டுக்குரியவரே இந்த வெற்றியாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 60 நாட்களுக்குள் வெற்றியாளர் தனது பணத்தினை பெற்றுக்கொள்ள முன்வரவேண்டும் என குறித்த அதிஷ்ட்டலாபச் சீட்டினை மேற்கொள்ளும் FDJ நிறுவனம் அறிவித்துள்ளது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1