Paristamil Navigation Paristamil advert login

கொழும்பில் பல்கலைக்கழக மாணவியின் உயிரை பறித்த டெங்கு

கொழும்பில் பல்கலைக்கழக மாணவியின் உயிரை பறித்த டெங்கு

17 தை 2024 புதன் 07:34 | பார்வைகள் : 5038


டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவி ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் பயிலும் மாணவி ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையில் குறித்த மாணவிக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் பின்னர் அவருக்கு டெங்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளமையை வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்