Paristamil Navigation Paristamil advert login

யாழில் பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

யாழில் பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

18 தை 2024 வியாழன் 16:25 | பார்வைகள் : 1948


யாழ்ப்பாணம் பகுதியிலுள்ள பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் அதிகரித்துவரும் டெங்கு நோய் பாதிப்பையடுத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ளது.

இதனையடுத்து இன்று வியாழக்கிழமை (18) இன்று வியாழக்கிழமை (18) நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் நேரடி பங்கேற்புடன் முன்னெடக்கபட்டுள்ளது.

இதேவேளை கொக்குவில் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார் விஜயம் மேற்கொண்டதோடு வீடுகளில் டெங்கு நுளம்பு காணப்படும் இடங்கள் அகற்றப்பட்டதோடு பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் மாத்திரம் டெங்கு பாதிப்பினால் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

மேலும் அண்மையில் பல்கலைக்கழ மாணவியொருவரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் ஒரு நாளைக்கு மாத்திரம் 500 பேர் வரையில் டெங்கு சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்