Paristamil Navigation Paristamil advert login

இலங்கையை அச்சுறுத்தும் டெங்கு - யாழில் மேலும் இருவர் பலி

இலங்கையை அச்சுறுத்தும் டெங்கு - யாழில் மேலும் இருவர் பலி

19 தை 2024 வெள்ளி 15:31 | பார்வைகள் : 1584


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலும் இரண்டு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

கொக்குவில் பகுதியில் மயங்கி விழுந்த, அரியாலை பகுதியை சேர்ந்த செல்வராசா சிந்துஜன் (வயது 31) எனும் இளைஞனை மீட்டு , யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் உயிரிழந்தார்.

பரிசோதனையின் போது அவருக்கு டெங்கு தொற்று இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

இதேவேளை முல்லைத்தீவு மல்லாவி பகுதியை சேர்ந்த ஒருவர், டெங்கு நோய் தீவிரமான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்