Paristamil Navigation Paristamil advert login

த்ரிஷாவிற்கு ரூ.1 கோடி மதிப்புள்ள வைர நெக்லஸ் பரிசளித்தாரா விஜய்?

த்ரிஷாவிற்கு ரூ.1 கோடி மதிப்புள்ள வைர நெக்லஸ் பரிசளித்தாரா விஜய்?

21 தை 2024 ஞாயிறு 11:14 | பார்வைகள் : 1791


நடிகை த்ரிஷாவின் வீட்டில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையின் போது, ரூ.1 கோடி மதிப்புள்ள வைர நெக்லஸ் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதனை பரிசளித்தவர் விஜய் என த்ரிஷா கூறியதாகவும் பத்திரிகையாளர் ஒருவர் பேசியுள்ள பேச்சு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார். சினிமாவிற்கு வந்த புதிதில் சில சர்ச்சைகளில் சிக்கிய போதும், அதன் பின்னர் பெரும்பாலும் சர்ச்சைகள் எதிலும் சிக்காமல் விஜய் பார்த்துக்கொண்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயும் அவரது மனைவி சங்கீதாவும் பிரிந்து விட்டதாகவும், விரைவில் இருவருக்கும் விவாகரத்து நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் பரவியது.

நடிகை ஒருவருடன் விஜய் நெருக்கமாக இருந்ததால், தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் பரவியது. இருப்பினும் இந்த தகவலை விஜய் தரப்பு ஆமோதிக்கவோ, மறுக்கவோ இல்லை. இதேபோல் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக உள்ள நடிகை த்ரிஷா குறித்தும் அவ்வப்போது சர்ச்சைகள் வெளியாவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது விஜய் மற்றும் த்ரிஷா ஆகியோரை குறி வைத்து சர்ச்சை ஒன்று புதிதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டியளித்த பத்திரிக்கையாளர் பாண்டியன் என்பவர், புதிய சர்ச்சைக்கு திரி கிள்ளியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை திரிஷா வீட்டில் வருமானவரித்துறை சோதனை ஒன்று நடைபெற்றதாகவும் அதில் வைர நகை ஒன்று சிக்கியதாகவும், பாண்டியன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

த்ரிஷா வீட்டில் சிக்கிய நகைக்கான கணக்குகளை கேட்டபோது, அந்த வைர நெக்லஸை பரிசளித்தவர் நடிகர் விஜய் என அவர் அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இவரது இந்த பேச்சு ரசிகர்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறி உள்ளது. இதனிடையே சமீபத்தில் நடிகை த்ரிஷா வீட்டில் சோதனை எதுவும் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்