Paristamil Navigation Paristamil advert login

பரிசில் புயல்! - பூங்கா, தோட்டங்கள் மூடப்படுகின்றன!!

பரிசில் புயல்! - பூங்கா, தோட்டங்கள் மூடப்படுகின்றன!!

22 தை 2024 திங்கள் 14:27 | பார்வைகள் : 2779


புயல் காரணமாக பரிசில் உள்ள பூங்காக்கள் தோட்டங்கள் மற்றும் கல்லறைகள் மூடப்படுகின்றன.

இன்று அதிகாலை முதல் பரிசில் புயல் காற்று வீசி வருகிறது. காலை 8 மணி அளவில் 95 கி.மீ வேகத்தில் பரிசில் புயல் பதிவானது. ஈஃபிள் கோபுரத்தின் உச்சியில் 124 கி.மீ வேகத்தில் புயல் பதிவானது.

அதையடுத்து, பரிசில் உள்ள பூங்காக்கள், தோட்டங்கள், கல்லறைகள் மற்றும் புல்வெளி பகுதிகள் மூடப்படுவதாக பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது.

பரிசில் வசிக்கும் மக்கள் வீட்டில் இருந்து வெளியேறும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வார நடுப்பகுதி வரை பரிசில் இதே போன்று புயல் காலநிலை நீடிக்கும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்