Paristamil Navigation Paristamil advert login

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி - மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி - மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு

24 தை 2024 புதன் 15:44 | பார்வைகள் : 798


நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன. அதேவேளை, ஆளும் பாஜகவை எதிர்க்கும் வகையில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற கூட்டணியை அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே, வரும் நாடாளுமன்ற தேர்தலை இந்தியா கூட்டணி இணைந்து சந்திக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூட்டணியில் போட்டியிடும் கட்சிகள், தொகுதிகள் பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விரைவில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பு இந்தியா கூட்டணியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில், 

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் யாருடனும் நான் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. மேற்குவங்காளத்தில் தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளோம்.

மேற்குவங்காளத்தில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என நான் எப்போதும் கூறுவேன். நாட்டில் இனி என்ன நடக்கபோகும் என்பது பற்றி நான் கவனத்தில் கொள்வதில்லை, ஆனால் நாங்கள் மதச்சார்பற்ற கட்சி. மேற்குவங்காளத்திற்கு நாங்கள் பாஜகவை தனியே வென்றுவிடுவோம். நான் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறேன். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்குவங்காளம் வழியாகத்தான் சென்றது ஆனால், அது குறித்து எங்களிடம் தகவல் தெரிவிக்கவில்லை' என்றார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்