Paristamil Navigation Paristamil advert login

25 மகிழுந்துகளுக்கு மேல் தீவைத்து எரித்த ஒருவர் கைது!

25 மகிழுந்துகளுக்கு மேல் தீவைத்து எரித்த ஒருவர் கைது!

29 மார்கழி 2023 வெள்ளி 08:00 | பார்வைகள் : 2315


25 மகிழுந்துகளுக்கு மேல் தி வைத்து எரித்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

18 வயதுடைய ஒருவர் டிசம்பர் 27, புதன்கிழமை Deux-Sèvres நகரில் வைத்து கைது செய்யப்பட்டார். 26-27 ஆம் திகத்க்குட்பட்ட இரவில், குறித்த நபர் 25 மகிழுந்துகளை எரியூட்டியுள்ளார்.

Boulevard des Capucins, Place du Boël, Rue Jules-Ferry, Rue Lavoisier மற்றும் Place Jeanne d'Arc போன்ற பகுதிகளில் தரித்து நின்ற மகிழுந்துகளை இவர் எரியூட்டியுள்ளமை கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.

குறித்த நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்