Paristamil Navigation Paristamil advert login

 பாலஸ்தீன ஆண்களை துன்புறுத்தும் இஸ்ரேலிய இராணுவம்

 பாலஸ்தீன ஆண்களை துன்புறுத்தும் இஸ்ரேலிய இராணுவம்

29 மார்கழி 2023 வெள்ளி 08:45 | பார்வைகள் : 2130


இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில் இஸ்ரேல் நாடு ஹமாஸ் அமைப்பை அழிக்கும் வரை போர் நிறுத்த மாட்டோம் என்று சூளுரைத்துள்ளது.

பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட பாலஸ்தீன ஆண்களை இஸ்ரேலிய இராணுவத்தினர் நிர்வாணமாக்கி தடுத்துவைத்துள்ளதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது என சிஎன்என் தெரிவித்துள்ளது.

அந்த காணொளியில் இரண்டுசிறுவர்கள் அரைநிர்வாணமாக்கப்பட்ட நிலையில் ஒருவரின் கரத்தை மற்றவர் பிடித்தபடி நடந்துசெல்வதை வீடியோ காண்பிப்பதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

சிறுவர்கள் நிர்வாணமான நிலையில் கைகளை உயர்த்திபடி காணப்படுவதை குறிப்பிட்ட வீடியோ காண்பிப்பதாக தெரிவித்துள்ள சிஎன்என், ஏனையை ஆண்களும் கைகளை உயர்த்தியபடி காணப்படுவதாக தெரிவித்துள்ளது.

எனினும் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய முடியவில்லை என தெரிவித்துள்ள சிஎன்என், காசா நகரத்தில் உள்ள யார்முக் மைதானத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக தனது ஜியோலொக்கேசன் காட்டுவதாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் இராணுவத்தினரிடம் இது குறித்து கருத்தை பெற முயன்றதாகவும் எனினும் அதுபலனளிக்கவில்லை எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக இஸ்ரேலிய படையினர் பல பாலஸ்தீனியர்களை சுற்றிவளைத்து கைதுசெய்து நிர்வாணமாக்கி தடுத்துவைத்துள்ளனர். 

சமீபத்தைய வீடியோவில் ஆண்கள் அரைநிர்வாணமான காணப்படுவதுடன், வீடியோவின் சில இடங்களில் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் நிலத்தில் அமர்ந்துள்ளனர்.

அதேசமயம் வேறு சிலர் கண்கள் கட்டப்பட்ட நிலையில் , இஸ்ரேலிய படையினர் அவர்களை சோதனையிடுகின்றனர்.

அதோடு பெண்கள் சிறுவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை காண்பிக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன

கால்பந்தாட்ட மைதானத்தில் முழுமையான ஆடையுடன் கண்கள்மூடப்பட்ட கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண்கள் மூவர் காணப்படுவதுடன் மைதானத்தில் இஸ்ரேலிய கொடியை காணமுடிகின்றது.

மேலும் அந்த மைதானத்தில் இராணுவ வாகனங்களையும் புல்டோசர்களையும் காணமுடிகின்றதாகவும் சிஎன்என் தெரிவித்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்