Paristamil Navigation Paristamil advert login

Val-de-Marne : மோட்டார் பட்டாசுகளை கடத்திச் சென்ற ஒருவர் கைது!

Val-de-Marne : மோட்டார் பட்டாசுகளை கடத்திச் சென்ற ஒருவர் கைது!

30 மார்கழி 2023 சனி 12:11 | பார்வைகள் : 2102


பாரிய சத்தத்துடன் வெடித்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மோட்டார் பட்டாசுகளை (mortiers d'artifice) கடத்திச் சென்ற ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

Haÿ-les-Roses (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், மகிழுந்து ஒன்றில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட 49 மோட்டார் பட்டாசுகள் கைப்பற்றப்பட்டது. 

சாரதிக்கு ஓட்டுனர் உரிமம் இல்லை எனவும், மகிழுதில் பயணித்த ஏனைய நபர்கள் கஞ்சா போதைப்பொருள் உட்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்