Paristamil Navigation Paristamil advert login

யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல்

யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல்

31 மார்கழி 2023 ஞாயிறு 08:55 | பார்வைகள் : 1380


யாழ்ப்பாணம் - புத்தூர் கிழக்கு பகுதியில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் சம்பமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றிருப்பதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோர் குறித்த வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் குறித்த வீட்டின் முன்பகுதி சேதம் அடைந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அச்சுவேலி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்