Paristamil Navigation Paristamil advert login

மேற்கு பிரான்சில் வெள்ளம்! - ஒன்பது மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

மேற்கு பிரான்சில் வெள்ளம்! - ஒன்பது மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

1 தை 2024 திங்கள் 16:54 | பார்வைகள் : 2857



வெள்ள அனர்த்தம் காரணமாக பிரான்சில் மேற்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Loire -Atlantique,
Vendée,
Orne,
Mayenne ,
Sarthe ,
Manche,
Pas-de-Calais,
Morbihan,
Finistère

ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை மாலை 4 மணி முதல் அதிகாலை 3 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், புயல் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றபோதும், பலத்தகாற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தலைநகர் பரிஸ் உட்பட இல்-து-பிரான்ஸ் மாகாணம் முழுவதும் மழை காரணமாக மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



புதிய மாதம் - புதிய மாற்றங்கள்! 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்