Paristamil Navigation Paristamil advert login

தென்கொரியாவில் எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திக்குத்து தாக்குதல்

தென்கொரியாவில் எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திக்குத்து தாக்குதல்

2 தை 2024 செவ்வாய் 08:55 | பார்வைகள் : 6252


தென் கொரியாவின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் லீ ஜே-மியுங் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம் பெற்றுள்ளது. 

இன்று செவ்வாய்க்கிழமை 02 ஆம் திகதி தெற்கு துறைமுக நகரமான பூசானுக்கு எதிர்க்கட்சித் தலைவர் விஜயம் செய்தபோதே இனந்தெரியாத நபரொருவரால் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், உடனடியாக உள்ளூர் பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் அவரது கழுத்தில் சுமார் ஒரு சென்றி மீற்றர் அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் YTN தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித்தலைவர் லீ ஜே மியுங்யை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்