Paristamil Navigation Paristamil advert login

 கனடாவில் எல்லைப் பாதுகாப்பு  பிரிவின் அதிரடி 

 கனடாவில் எல்லைப் பாதுகாப்பு  பிரிவின் அதிரடி 

3 தை 2024 புதன் 09:45 | பார்வைகள் : 6028


கனடாவில் எல்லை பகுதிகளில் குற்றச்செயற்பாடுகள்அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் மோப்ப நாய்களை பயன்படுத்தி குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்படும் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள், பணம், உணவுப் பெர்ரட்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் போன்றவற்றை கண்டு பிடிப்பதற்கு இவ்வாறு மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

தடை செய்யப்பட்ட பொருட்கள் கனடிய எல்லை வழியாக கடத்திச்செல்லப்படுவதனை இவ்வாறு மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

வித்தியாசமான பொருட்களை கண்டு பிடிப்பதற்கு தனித்தனியாக பயிற்றுவிக்கப்பட்ட மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுவதாக எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்