Paristamil Navigation Paristamil advert login

புயல் : நண்பகலின் பின்னர் மூடப்பட்டுள்ள பூங்கா, கல்லறைகள்!!

புயல் : நண்பகலின் பின்னர் மூடப்பட்டுள்ள பூங்கா, கல்லறைகள்!!

3 தை 2024 புதன் 14:23 | பார்வைகள் : 2860


புயல் காரணமாக பரிசில் உள்ள பூங்காக்கள், தோட்டங்கள் மற்றும் கல்லறைகள் மூடப்பட்டுள்ளன. இன்று இரண்டாவது நாளாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணி முதல் பூங்காக்கள் மூடப்படுவதாக பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது. பரிசில் மழை மற்றும் புயல் காரணமாக மஞ்சள் நிற எச்சரிக்கையை Météo-France விடுத்துள்ளது. அதையடுத்து, முன்னெச்சரிக்கை காரணமாக அவை மூடப்பட்டுள்ளன.

பரிசில் இன்று 80 தொடக்கம் 90 கி.மீ வேகம் வரை புயல் வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்