Paristamil Navigation Paristamil advert login

யாழில் கசிப்புடன் கைது செய்யப்பட்ட தம்பதி!

யாழில் கசிப்புடன் கைது செய்யப்பட்ட தம்பதி!

4 தை 2024 வியாழன் 04:40 | பார்வைகள் : 1719


யாழ்ப்பாணத்தில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் தம்பதியினரை கைது செய்ததுடன் 15 லீட்டர் கசிப்பினையும் மீட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்