Paristamil Navigation Paristamil advert login

இலங்கை சிறையில் உள்ள 12 தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரிக்கை

இலங்கை சிறையில் உள்ள 12 தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரிக்கை

7 தை 2024 ஞாயிறு 15:35 | பார்வைகள் : 1173


சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 12 தமிழ் அரசியல் கைதிகளையும், எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னதாக விடுதலை செய்ய வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 4 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக வடக்கிற்கு பயணித்துள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கையெழுத்துக்கள் அடங்கிய மனுவொன்று குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகனிளால் கையளிக்கப்பட்டது.

இனங்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் அரசியல் முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஜனாதிபதி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்