சார்லி-எப்தோ தாக்குதலின் ஒன்பதாவது ஆண்டு நினைவு நாள்! - முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து பங்கேற்றார்!

7 தை 2024 ஞாயிறு 17:47 | பார்வைகள் : 9564
சார்லி-எப்த்தோ பத்திரிகை அலுவலகம் மீது ஜிகாதிப் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட கொடூர தாக்குதலின் ஒன்பதாவது ஆண்டு நினைவு தினம் ஒன்று பரிசில் நினைவுகூரப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து, பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ உள்ளிட்ட பலர் அதில் பங்கேற்றனர். உரை எதுவும் இன்றி மிகவும் அமைதியான முறையில் இந்த அஞ்சலி நினைவேந்தல் இடம்பெற்றது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதி, காலை 11.30 மணிக்கு இந்த தாக்குதல் பரிசில் உள்ள (11 ஆம் வட்டாரத்தின் Rue Nicolas-Appert வீதியில் அமைந்திருந்த) சார்லி-எப்தோ பத்திரிகை அலுவலகத்தில் இடம்பெற்றது. அல்ஜீரியாவில் பிறந்த இரு பயங்கரவாதிகள் மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் காயமடைந்தனர்.
கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் நினைவாகவே இந்த அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதான தனது X சமூகத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1