Paristamil Navigation Paristamil advert login

படிப்படியாக பேருந்துகள் இயக்கம் குறைப்பு.. நள்ளிரவுக்கு மேல் பஸ்கள் ஓடாது: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

படிப்படியாக பேருந்துகள் இயக்கம் குறைப்பு.. நள்ளிரவுக்கு மேல் பஸ்கள் ஓடாது: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

8 தை 2024 திங்கள் 14:26 | பார்வைகள் : 2007


6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்ததால் திட்டமிட்டபடி நாளை போராட்டம் தொடங்கும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.  

இந்த நிலையில், திருச்சியில்  பேருந்துகள்  இயக்கம் தற்போதே குறையத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக  சி.ஐ.டி.யு, தொழிற்சங்கத்தின் சவுந்தரராஜன் அளித்தப் பேட்டியில் கூறியதாவது: பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் பேருந்துகள் இயக்கம் படிப்படியாக குறைக்கப்படும் என்றும் நள்ளிரவுக்கு மேல் எந்த பேருந்துகளும் ஓடாது. தொலைதூரம் செல்லக் கூடிய பேருந்துகள் இன்று நள்ளிரவு 11.59 மணி வரை மட்டுமே இயக்கப்படும். நீண்ட தூரம் செல்லும் பேருந்துகள் நாளை காலை  சம்மந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று பயணிகளை இறக்கி விட்ட பின் நிறுத்தி வைக்கப்படும்" என்றார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்