Paristamil Navigation Paristamil advert login

சென்னையில் 5 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்பநாய் உதவியுடன் சோதனை

சென்னையில் 5 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்பநாய் உதவியுடன் சோதனை

8 மாசி 2024 வியாழன் 13:00 | பார்வைகள் : 1682


சென்னை 5 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மெயில் வந்துள்ளது. இதனால் அப்பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை பெற்றோர்களுடன் அனுப்பிவைக்கப்பட்டனர். 

சென்னையில் அண்ணாநகர், பாரிமுனை, கோபாலபுரம், ஆர்.ஏ.புரம், ஜேஜே நகரில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு மர்ம நபர் மூலமாக மெயிலில் மிரட்டல் வந்துள்ளதாக சென்னை மாநகர போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 5 பள்ளிகளில் இருந்து தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து மோப்ப நாய் மற்றும் நிபுணர்கள் உதவியுடன் பள்ளிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், மிரட்டல் மெயில் அனுப்பிய நபர் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்