Paristamil Navigation Paristamil advert login

கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் இன்று முதல் நிரந்தரமாக மூடல்

கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் இன்று முதல் நிரந்தரமாக மூடல்

31 ஆடி 2023 திங்கள் 14:16 | பார்வைகள் : 2900


கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் இன்று முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது.

இதனையடுத்து, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதரகம் தொடர்பான செயற்பாடுகளை, புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம் பொறுப்பேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுக்கு அமையவே நோர்வே தமது தூதரகத்தை இலங்கையில் மூடுவதாக அறிவித்துள்ளது.

இதன்படி இலங்கையை தவிர ஏனைய பல நாடுகளின் தூதரகங்களையும் நோர்வே மூடிவருகின்றது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்